Monday, August 29, 2016

இயற்கை வாழ்வியல் என்றால் என்னவென்று பல நட்பாளர்கள் கேட்கிறார்கள்🍁

இயற்கையான, சமைக்காத  உணவுகளை உண்பதோடு எந்தவித இரசாயண உணவுகளையும்  உண்ணாமல் பற்பசை முதல்  அழகுப் பொருட்கள்  வரை எதிலும் இரசாயணங்களை தவிர்த்து  பனியில் உலவி, வெயிலில் காய்ந்து, முடிந்தால் மழையிலும்  நனைந்து  வாழ்வதோடு ஏசி, நான்ஸ்டிக், குக்கர் சமையலை விட்டு கொசுமருந்து, சோப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து  மண்பானை சமையல், மரபணு மாற்றம் செய்யாத காய்கறி பழங்களை  உண்டு வாழ்வதோடு உடற்பயிற்சி, மருத்துவம் போன்ற அனைத்திற்கும் இயற்கையை முற்றிலும் சார்ந்து  வாழ்வதே இயற்கை வாழ்வியல் வழிமுறை🌹

இதில் நூற்றுக்கு 70 % கடைப்பிடித்து வந்தால் கூட போதும் உடல் ஒரு புதிய  பரிமாணத்தில் இயங்க ஆரம்பித்துவிடும். இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்த  சில நாட்களிலேயே இரத்த அழுத்தம், சக்கரை,புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, கொழுப்பு, உடல் பருமன், குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, கர்பப்பைக் கோளாறு போன்ற வியாதிகள் குணமாக ஆரம்பித்துவிடும்.🍒

இது எதோ கதை என்று நினைத்து விடாதீர்கள் இந்த வழிமுறைகளை பயன்படுத்தி சென்னை மேயர் சைதை துரைசாமி தனது சிறுநீரகச் செயலிழப்பை சீராக்கி உள்ளார்🍍
நம்மிடம் பயிற்சிபெற்ற பல சக்கரை நோயாளிகள் செயற்கை இன்சுலின் , மாத்திரைகளை நிறுத்தி இயற்கை இனிப்புகளை உண்டு சக்கரை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதே
வழிமுறைகளை பயன்படுத்தி பல தம்பதிகள் மழலை பாக்கியம் பெற்றுள்ளனர்🍅
எனது சொந்த அனுபவத்தில் எனக்கு வந்த இதயநோய், மன அழுத்தம், முதுகு தண்டுவடப் பிரச்சனை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை இயற்கை வாழ்வியல் முறை, யோகா, தற்காப்புப் பயிற்சி போன்றவற்றை பயன்படுத்தியே முழுவதும் குணப்படுத்தினோம்🌽🧀

காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை நாம் எந்த இரசாயண உணவையும் உண்ணாமல்  தினமும் ஒருவேளை நாட்டுத் தேங்காய், நாட்டு வாழைப்பழம்
போன்றவற்றை உணவாக உண்டு வருவதோடு, தேநீர், காப்பி, பற்பசை, சோப்பு, நொறுக்குத் தீணிகள் கொசுமருந்து போன்றவற்றை தவிர்த்து  அரைமணி நேரம் வெயிலில் யோகா, உடற்பயிற்சி செய்துவந்தால் கூட போதும். அதிசயிக்கத் தக்க வகையிலான பெரும்பயன்களை அடையலாம்.! இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்🍐🍋🍉

amyogatrust.blogspot.in
Am Herbals
9629368389

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment