ஒரே ஆசனம் ஓகோனு ஆரோக்கியம்✡ சிலநாட்களுக்கு முன் நமது வாட்ஸ் அப் பக்கத்தில் ஒரு யோகாசனத்தை பற்றி எழுதி இருந்தேன்✡ இதைபடித்த ஒரு வெளிநாட்டு நண்பர் என்னங்க இது? விளம்பரத்திற்காக இதைதான் சொல்லலாம்னு இல்லையா?. நீங்க குறிப்பிட்ட அந்த ஆசனத்தை நானும் பல ஆண்டுகள் செய்துதான் வருகிறேன் கொஞ்சம் உடலுக்கு ஓய்வுகிடைக்கும் அவ்வளவுதான்✡ மற்றபடி அதற்கு பெரிய பலன் ஒன்றும் கிடையாது எனது இரத்த அழுத்தம், சக்கரை எல்லாம் அப்படியேதான் உள்ளது என்று கூறி நமது வாயைக் கிளறினார். ✡ அந்த நேரத்தில் நாம் மூலிகை மாத்திரை தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் பிறகு இதுபற்றி பதிவிடுகிறேன் என்றுகூறி கைப்பேசியை வைத்துவிட்டேன்✡ நண்பர் எந்த அமைப்பில் யோகா கற்றார் என்று தெரியவில்லை. சரி எங்கு கற்றால் என்ன.! ஆனால், சாந்தியாசனம் என்ற சவாசனத்தை பயிலும் முன் ஒரு சில யோகாசனத்தை செய்தபின்னோ அல்லது உடல் களைத்துப் போகுமளவு சில உடற்பயிற்சிகளை செய்தபின்போ செய்தால் அதிக பலனை உணர்வதோடு இரத்த அழுத்தமும் சீரான நிலைக்கு வருவதை உடனே உணரமுடியும். இது எப்படியெனில் நன்றாக வேலை செய்து கடுமையான தாகம் ஏற்பட்ட பிறகு நீர் குடித்தால் எப்படி உடல் நீரின் தன்மையை வேகமாக ஈர்த்துக் கொள்வதோடு அதன் சுவையும் நமக்கு ஆனந்தத்தை தருவதுபோல் இருக்கிறதோ அதுபோல் தான் இதுவும். அப்படி இல்லாமல் சும்மா கால் மணி நேரத்திற்கு ஒருமுறை நீரையோ, பாட்டிலில் பானங்களையோ இடையறாது உள்ளே தள்ளிக் கெண்டிருப் பவர்களுக்கு நீரின் சுவை எப்படித் தெரியும், உடல் உறுப்புகளான நுரையீரலும்,சிறுநீரகமும், கல்லீரலும் ஆனந்தத்தை உணருமா அல்லது அடேய் ஆர்வக்கோளாறு எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடுடா என்று கதறுமா? அதுபோலவே நன்றாக பகலெல்லாம் உழைத்து களைத்து இரவில் தூங்கும் தொழிலாளியின் உறக்கத்திற்கும் வட்டிக்கடையில் வெங்கலப் பானைபோல் ஏதோ ஒரு இடத்தில் அசையாமல் இருந்துவிட்டு போனாப் போகுதுனு அரைமணி நேரம் வெட்டிக் கதையடித்துக் கொண்டே நடைப்பயிற்சி செய்துவிட்டு இரவில் தூங்கச் செல்லும் செல்வந்தனின் தூக்கத்திற்கும் எத்தனை வேறுபாடு உள்ளது. என்பதை நாம் செல்லியாத் தெரிய வேண்டும்.! இன்றைக்கு யோகா என்று பெயரை வைத்துக் கொண்டு இதுபோன்ற பல வெங்கலப் பானைகளை வரிசையாக நிக்கவைத்து தொட்டு விளையாட்டு, கபடி என்று பல விளையாட்டுகளை கற்றுக் கொடுத்துவிட்டு பிறகு உடல் களைத்தவுடன் அமைதியாக உட்காரச் சொல்லி நெற்றிக் கண் திறக்கிறது பார், தியானவெளி தெரிகிறது பார் என்றெல்லாம் சொல்வது இதற்காகத்தானே.! அதுசரிங்க ஆனால், எங்களுக்கு நேரமே குறைவாகத்தான் உள்ளது. பத்துநிமிடம் சாந்தியாசனம் செய்துவிடலாம் ஆனால், உடல் களைப்படைய வேறு என்ன செய்வது என்றால் சாந்தியாசனம் செய்வதற்கு முன் சர்வாங்காசனம், விபரீதகரணி, ஹலாசனம், அதோமுக சவானாசனம், அர்த்த சிரசாசனம் போன்ற ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை மூன்று முறை 15 விநாடிகள் விதம் செய்துவிட்டு புஜங்காசனம் இரண்டு முறை 15 விநாடி விதம் அல்லது மட்ச்யாசனம் ஒருமுறை 30 விநாடிகள் வரை செய்துவிட்டு சாந்தியாசனம் செய்தால் உடனடியாக உடல் பூரண ஓய்வை உணர்ந்து நோய்களை படிப்படியாக குணமாக்குவதோடு சாந்தியாசனம் செய்த நாள்முழுக்க மனமும் உடலும் உற்சாகமாக இயங்கும்.! மற்ற ஆசனங்களை நேரில் கற்றுக் கொள்ளுங்கள்.! ஒகோ ஆசனமான சாந்தியாசத்தை மட்டும் இப்பொழுது நாம் கற்பிக்கிறோம்.✡ இதில் பல முறைகள் உள்ளது ஆனால், பயன்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான்.! ஆயினும் மண்பண்ட சமையலுக்கு ஆரோக்கியமும் ருசியும் அதிகம்✡ அலுமினியத்திற்கு குறைவு. அதுபோல நமது உடல் நிலைக்கேற்ப பயனுண்டு.! ✡செய்முறை 1.விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும் 2.தலையை ஏதாவது ஒருப்பக்கம் லேசாக சரித்து வைத்துக் கொள்ளவும்.! 3.உடலை தளர்வாகவும் மனதை அமைதியாகவும் வைத்துக்கொள்ளவும்! 4. கண்களை மூடியபடி வைத்துக் கொண்டு மூன்று முறை மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக வெளிவிடவும்.5. மூன்று முறை கண்களை நன்றாக சுருக்கி விரித்துப் பார்க்கவும். 6.மூன்றுமுறை கண்களை பக்கவாட்டில் வல இடமாக நகர்த்தவும். 7.இப்பொழது புருவ மத்தியிலிருந்து கண்களை வலதுபக்கமாக சுத்தி புருவமத்திக்கு வரவேண்டும் பிறகு இதுபோல இடதுபக்கமாக சுத்தி புருவமத்திக்கு வரவேண்டும். இது ஒரு சுற்று இதுபோல் இன்னும் இரண்டு சுற்றுகள் செய்ய வேண்டும். 8. மூக்கு நுனியை 5 விநாடிகள் புருவ மத்தியை 5 விநாடிகள் என்று மொத்தம் மூன்று சுற்றுகள் செய்துவிட்டு கண்களை மெதுவாக மூடிக்கொள்ளலாம்.9.மூன்று மூச்சை ஆழமாக இழுத்துக் கொள்ளவும். 10. இப்பொழுது கால்கட்டை விரல் , கணுக்கால், முட்டிக்கால், ஆசனவாய், சிறுநீரகம், வயிறு, இதயம், நுரையீரல் ,தொண்டைக்குழி, வாய், மூக்கு, கண்கள், புருவமத்தி, உச்சந்தலை என்று உடலில் உள்ள ஒவ்வெரு பகுதியையும் தனித்தனியாக இறுக்கி அந்த இடம் ஓய்வாக, பலமாக ஆரோக்கியமாக இருப்பதாக ஒவ்வெரு பகுதிக்கும் 2 முறை மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். 11. பிறகு உச்சந்தலையை நினைத்து முடிந்ததும் உடலில் உள்ள எல்லா பகுதிகளையும் இறுக்கமாக்கி என் உடலில் உள்ள ஒவ்வெரு பகுதியும் ஓய்வா, பலமா, ஆரோக்கியமா இருக்கு என்பதாக 3 முறை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.! 12. மெதுவாக இரண்டு முறை மூச்சை இழுத்து விட்டு விட்டு இரண்டு உள்ளங் கைகளையும் எடுத்து தொப்புளை மையப்படுத்தி விரித்து வைக்கவும். ்13. இரண்டு கட்டைவிரல்களும் ஒன்றைஒன்று தொட்டதுபோன்றும் , இரண்டு ஆள்க்காட்டி விரலும் ஒன்றைஒன்று தொட்டது போல் இருக்க வேண்டும். 14. அப்படியே உங்கள் வயிற்றினுள் ஒரு ஒளி வட்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டே படுத்திருக்க வேண்டும். முழுகவனத்தையும் வயிற்றிலேயே வைத்துக் கொண்டு மூச்சு உள்ளே போகும்போவதையும் வெளியே போகும்போவதையும் கவனித்துக் கொண்டே இருங்கள். 15. இப்படியே 5 நிமிடம் படுத்திருங்கள். அந்நேரம் உங்களையறிமால் தூக்கம் வந்தால் தூங்கிவிடுங்கள் . 16 . பிறகு கைகளை கீழே எடுத்து 3 முறை மூச்சை ஆழமாக இழுத்துவிடவும். 17.மெதுவாக வலதுகையை தலைக்கு நேராக நீட்டி உடம்பை வலப்பக்கமாக ஒருக்களித்து மெதுவாக எழுந்து அமரவும்.! அம்மாடியோ … 17 நிலைகள் கொண்ட ஆசனம் இதுதான் போல.! இந்த முறை சவாசனம் பல்வேறு யோகாசன குருமார்களின் முறையை உள்ளகத்தில் கொண்டு நம்மால் உருவாக்கப்பட்ட புதிய முறை.! இரத்த அழுத்தம், உடல் பருமன், சக்கரை வியாதி, மனஅழுத்தம், பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு நாம் யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சியளித்து பலரின் செயற்கை இன்சுலின், இன்ஹேலர் மற்றும் தள்ளிவண்டிகளுக்கு ஒய்வு கொடுத்து ஆரோக்கியமாக்க முக்கிய காரணம் இந்த ஓகோ ஆசனம்தான் மரணப்படுக்கையில் இருப்பவர் கூட இந்த ஆசனத்தை முறையாக செய்தால் மூன்றுநாளில் எழுந்து அமர்ந்துவிடுவார்.! நலம் பெருகட்டும் … -ஏகப்பிரியன் மு. இஸ்மாயில் D.Y.T amyogatrust.blogspot.in Mobile:9629368389
No comments:
Post a Comment