இன்றைய நவீன காலத்தில் விஞ்ஞானம் இத்தனை வளர்ந்த காலத்திலும் சிலர் உடலை வளைத்து நெளித்து சுருட்டி யோகாசனம் செய்வதைப் பார்க்கும்போது பலருக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், அப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வாடிக்கையாக சக்கரைக்கு மூன்று இரத்த அழுத்தத்திற்கு இரண்டு கொழுப்பிற்கு ஒன்று தைராய்டிற்கு ஒன்று என்று பல மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு இதில் சக்கரை இருக்கு இதில் கொழுப்பிருக்கு இதில் உப்பிருக்கு என்று பல முக்கிய உணவுகளை தவிர்த்து குற்றுயிராக வாழும், நவீன மருத்துவம் என்று கூறப்படும் அலோபதி மருத்துவத்தின் பாதுகாப்பில் வாழும் நவயுக ஞானிகள் அனைவருக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்.! வினைப்பயன் இருப்பின் இதிலிருந்து தெளிவுபெறுங்கள்.! இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உணவுகளையும் மனிதன் சாப்பிடலாம். உடல் அதன் சக்தியை உறிஞ்சி சக்கையை வெளியேற்றிவிடும்.மனிதனால் உருவாக்கப்பட்ட அத்தனை நோயையும் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். நம்புங்கள் இதுதான் உண்மை.! தேவை பொறுமையும் விடமுயற்சியும் தான்.! அப்படி விடா முயற்சியால் தனது பிணியை வென்ற இரண்டு சாதனை பெண்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.! முதலாமாணவர் தேவி இவர் குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர் தனது 23 வது வயதில் இரண்டாவது பிரசவத்தின் போது ஏற்ப்பட்ட கடுமையான உடல் அதிர்ச்சியின் காரணமாக நடக்கவும் எழுந்து நேராக நிற்கவும் முடியாமல் அவதிப்பட்டதோடு அலோபதி மருத்துவத்தால் என்ன வியாதி என்றுகூட கண்டறிந்து கூறமுடியாமல் ஒருவருடம் அலைக்கப்பட்டு இறுதியில் எங்களால் முடியாது யோகாசனம், பிசியோதெரபி போன்ற எதிலாவது தீர்வு கிடைக்கலாம் என்று கைவிடப்பட்ட தேவியை பத்துநாட்களிலேயே அவரின் விடாமுயற்சியுடன் கூடிய யோகாசனப்பயிற்சி 50 சதவீதம் குணப்படுத்தியது.! முதலில் அவரால் ஒருவரின் துணையில்லாமல் நடக்கவோ, உட்காரவோ கூட முடியாது. கழிவறையில் கூட ஒருவர் அருகில் இருந்து பிடித்துக் கொள்ள வேண்டும். பத்துநாள் பயிற்சி மற்றும் வல்லாரைக் கீரையின் உதவியால் தானே நடக்கவும் தனது குழந்தையை எடுத்துக்கொண்டு மாடிபடியில் ஏறி இறங்கும் அளவிற்கு தேறிவிட்டார். இப்பொழுது மூன்றுவருடம் கடந்தநிலையில் 90 சதவீதம் குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளார்.! இந்தப் பெண்ணுக்கு பயிற்சி கொடுத்தது என்னை எனக்கே உணர்த்திய அற்புத நிகழ்வு.! இரண்டாமாணவர் சாந்தி இவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. என்ன அய்யா , ஒருவேளை தூரதிருஷ்டி மூலம் குணமாக்கி விட்டீர்களா?. என்று கேட்டுவிடாதீர்கள் அப்படி இல்லை சமீபத்தில் ஒருநாள் தூர்தர்சன் <பொதிகை> தொலைக்காட்சியில் வட்டு எறிதலில் ஆசிய சாம்பியனாக முடிசூடி முதலிடம் பிடித்து வெற்றிப்பெற்ற S.சாந்தி அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அதில் அவர் தான் மீண்டும் விளையாட வந்ததே பெரிய விசயம் என்றும் தனது திருமணத்திற்கு பின் கடுமையான முதுகுத்தண்டுவட பாதிப்பு மற்றும் இருதய வால்வு சுருக்கம் போன்ற பிரச்சனைகள் அதிக அளவில் இருந்ததால் டாக்டர்கள் வட்டைக்கையால் கூட தொடக்கூடாது வலி அதிகமாகிவிடும், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்க வேண்டும் என்றுகூறிவிட்டனர். ஆனால், எனது பயிற்சியாளர் பெருமாள் இராமசாமி அவர்கள் தான் அதெல்லாம் பயப்படாதே சில யோகாசனப் பயிற்சிகள் இருக்கிறது என்று கூறி பத்துவிதமான யோகாசனப் பயிற்சிகளையும் எங்களது விளையாட்டு உடற்பயிற்சியோடு சேர்த்து வழங்கி வந்தார் அதனால் எனது உடல் வலி மறைந்தது, தண்டுவடக் கோளாறும் இதயவால்வு பிரச்சனையும் என்னை ஒன்றும் செய்யவில்லை அதோடு அவர் அடிக்கடி மனம்தான் எல்லாம் நீ மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பார் … அந்த வார்த்தைகளும் பயிற்சிகளும் தான் என்னை இன்றைக்கு ஆசிய அளவில் தங்கம் வெல்ல வைத்துள்ளது என்றார் அந்த தங்கமங்கை.! இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் இயற்கையின் ஆற்றலை இடைவிடாது மனிதனிடம் பறைசாற்றிக் கொண்டே உள்ளது.! ஆனாலும், தீவினைப்பயனால் மனிதன் தொடர்ந்து அனைத்தையும் வேடிக்கையாக கடந்துகொண்டே திங்க வேண்டியதை எல்லாம் ஒதுக்கிவிட்டு வாடிக்கையாக இரசாயண மருந்துகளை தின்றுக் கொண்டிருக்கிறான்…! நன்மதியாளர்கள் நலம் பெறட்டும் … amyogatrust.blogspot.in AUM HERBALS Mobile:9629368389
No comments:
Post a Comment