Friday, July 1, 2016

திரிபலா

இயற்கை வழியில் வாத, பித்த, கப வியாதிகளை குணமாக்குங்கள்         திரிபலா சூரணம் ஒரு எளிய சர்வரோக நிவாரணி. கடுக்காய் ஒருபங்கு  நெல்லிக்காய்  அரைபங்கு  தான்றிக்காய் கால் பங்கு இவற்றின் தோலை மட்டும் சேகரித்து இடித்துவைத்துக் கொண்டால் திரிபலா சூரணம் தயார்.!  வாதத்திற்கு வெந்நீரிலும் பித்தத்திற்கு நெய்யிலும் கபத்திற்கு தேனிலும் ஒருத்தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளையும் கொடுத்துவர பேதியை சுகமாக வெளியேற்றி பித்தச்சூட்டையும் குறைத்து கைகால் உளைச்சலையும் நீக்குவதுடன் கபத்தையும் இதமாக வெளியேற்றிவிடும்.! இந்த சூரணத்தை வெந்நீரில் போட்டு வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும். இதே பொடியை தேங்காய் எண்ணையில்  லிட்டருக்கு 48 கிராம் விதம் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்துவர பித்தச்சூடு குறைந்து முடி உதிருதல் நிற்கும்.! உதட்டு வெடிப்பு மற்றும் புண்களுக்கும் இந்த எண்ணையை பயன்படுத்தலாம்! தவிடு நீக்காத அரிசிக்கஞ்சி நீரில் திரிபலா சூரணத்தை கலந்து குடித்துவர இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிவதோடு காமலை நோயும் குணமாகும். பருத்த உடலை சிறுக்க வைக்க வெந்நீரில் ஒருத்தேக்கரண்டி தினமும் சாப்பிடலாம். மெலிந்த உடலை தேற்ற நாட்டுப்பசும்பால் மற்றும் தேன்கலவையோடு தினமும் இரவில் உண்டுவரலாம்.! மலச்சிக்கல், ஆஸ்துமா, சக்கரைவியாதி, இரத்த அழுத்தவியாதி இருப்பவர்கள் தினமும் இந்தப் பொடியை இரவில் ஒருத்தேக்கரண்டி அளவு கால்டம்ளர் நீரில் சாப்பிட்டபின் உண்டு வர மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும்.! நாள்ப்பட்ட நோய்களுக்கு வலிமையான தீர்வாகவும் பருவ  நோய்களுக்கான எளிமையான தீர்வாகவும் விளங்குகிறது திரிபலா சூரணம். திரிபலாவோடு ஆடதோடை மற்றும் சுக்கு சேர்த்து தயாரித்துள்ள பஞ்சமூலி சூரணம் தேவைப்படுவோர் நம்மை அழைக்கவும்.!  AUM HERBALS MOBILE:9629368389! amyogatrustblogspot.com நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment