ஹீலர்ரங்கராஜின் திருமூலர்,திருவள்ளுவர் வழியில் ஆரோக்கியம் நிகழ்வு குமரிமாவட்டம் தக்கலையில் கடந்த ஞாயிறன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.! முதலில் ஏதோ போய்வருவோம் என்று சிரத்தையில்லாமல் தான் போனேன் என்மகன் வேறு ஏம்ப்பா, சிலநேரம் நீங்க அரைமணிநேரம் பேசினாலே எனக்கு அழுகையா வருது இதுல எட்டு மணிநேரம் எப்படிப்பா? என்று கண்ணில் கிளிசரினைப் போட்டான்.! ஆரம்பத்துல ஒருநாள் அனடாமிக் தெரபி பாஸ்கரின் நிகழ்விற்கு போய் பாதியிலேயே தலைதெறிக்க ஓடிவந்தது வேறு நினைவிற்கு வந்தது. ரங்கராஜ் அய்யா பாஸ்கரின் குரு என்று வேறு கூறுகிறார்கள். சரிதான் போய்ப்பார்ப்போம் ஆனால், தலைவலிச்சா ஓடிவந்து சுக்குக்கசாயம் வச்சிக்குடிக்க வீடுபக்கமாய் இருந்தாலும் பரவாயில்லை. 30 கிலோ தள்ளியல்லாவா இருக்கிறது? என்று யோசித்தவாறே ஒருவழியா நிகழ்விற்கு போய்ச்சேர்ந்தோம்.! சரியாக பத்துமணிக்கு நிகழ்வு இரண்டு கெட்டவார்த்தைகளுடன் இனிதே ஆரம்பித்தது, ஏன் சம்மணமிட்டு சாப்பிடவேண்டும்? உணவை எப்படி சாப்பிட வேண்டும்? ஏதற்காக முன்னோர்கள் கைகளில் நீரைவிட்டு சுத்தி பிறகு கைகளில் உள்ள நீரை உறிந்து குடித்துவிட்டு சாப்பிட்டார்கள்? சமையலரை ஒரு கொலைக்களம் எப்படி? பிராத்தனையின் அவசியம் உணவுக்குழாய், மூச்சுக்குழாய், உணவு ஜீரணமாகும் முறை என்று ஒரு முழுமையான மெய்ஞ்ஞான விஞ்ஞான வகுப்பையே நடத்திவிட்டார். அதுவும் பகவத்கீதையின் சமஸ்கிருதமும் திருவள்ளுவரின் தமிழும் விஞ்ஞான ஆங்கிலமும் அவரின் வார்த்தைகளில் பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடி நம் நாடிநரம்பையெல்லாம் நிறைத்து விடுகிறது … மனிதனுக்கு ஆயுள் இருப்பது போலவே பிணத்திற்கும் ஆறு மணிநேரம் ஆயுள் உள்ளது, அந்த நேரத்திற்கு பிறகு அது அழுக ஆரம்பித்துவிடும். பிரிசரில் வைத்தால் அழுகாமல் இருக்காது அழுகும். ஆனால், நாற்றம் தெரியாது அவ்வளவுதான்.! பிரிசரில் வைத்துள்ள பிணத்தை ரெண்டுநாள் கழித்தெடுத்து கண், சிறுநீரகம் என்று எடுத்து அடுத்த உடலில் வைக்கமுடியாது.! உயிர்போன மனித உடலைப் பார்த்துவந்தால் உடனே குளிக்க வேண்டும் அல்லது இறந்த உடலில் இருந்து வெளியேறிய காற்று நம் உடலை கெடுக்கும் என்பது உண்மை. ஆனால், நாம் பல மணிநேரங்களுக்கு முன்பு வெட்டிய ஆடு,மாடு, கோழி பலநாட்களாக ஐஸில் வைத்தமீன்கள் எல்லாவற்றையும் சப்புக்கொட்டி சாப்பிடுகிறோம். அந்த அழுகிய பிணங்கள் நமது உடம்பை வளர்க்குமா, குலைக்குமா? செத்த மனிதனின் உடலைப்பார்த்தால் குளிக்கவேண்டும், செத்தவீட்டிற்கு பதினாறு நாள் தீட்டு ஓராண்டு விசேசம் இல்லை. ஆனால், செத்து அழுகிய பிணங்களை சமைத்து வீட்டில் விசேசம் செய்கிறோமே.! இதுசரியா, ஆரோக்கியமானதா? சமைக்காத அரைக்காத வெட்டாத உணவுப் பண்டங்களை மட்டுமே பிரிசரில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஆனால், இட்லிமாவை நான்கு நாள் பிரிசரில் வைத்து பயன்படுத்துவது முறையா? என்று பல்வேறு அர்த்தமுள்ள வினாக்களை எழுப்பிவிட்டுவிட்டு … இப்ப என்ன செய்யலாமுங்க? என்று மக்களை சிந்திக்கத் தூண்டுகிறார்.! அதோடு அரிசிச்சோறு மிக நல்லது மூன்று வேளையும் சாப்பிடுங்க, பழம், கடலை, இனிப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு உடனே உணவையும் சாப்பிடலாம். ஆனால், சாப்பிட்ட உடன் இவற்றை சாப்பிடக்கூடாது … தினமும் இரவில் நிறையநீர்விட்டு காய்ச்சி பசும்பால் குடிங்க நான் அப்படி சாப்பிடுவதால்தான் எனக்கு 51 வயதில் பல் முளைக்குது என்று தன்பல்லைக் காட்ட அதை ஒரு சிறுமி அருகில் சென்றுப் பார்த்து ஆமா என்று ஆச்சரியமாய் தலையசைக்க கூட்டத்தில் ஒருவர் இதென்ன அதிசயம் என் மனைவிக்கு 60 வயசுல இப்ப முன்பு விழுந்தபல் முளைச்சிட்டு இருக்கு என்று ஒரேப்போடாகப் போட, அப்ப ஐயாயிரம் ,பத்தாயிரம்னு செலவுப் கேப் போட்டது பல்லைப் பிடுங்கி செயற்கைப் பல் வைத்ததெல்லாம் வீண்தானா? என்று பலரும் வாயைப்பிளந்தனர்.! நிறைவாக விளக்கேற்றுவதில் உள்ள நன்மைகளையும் அவசியத்தையும் எத்தனை திரிபோட வேண்டும் என்பதையும் விளக்கேற்றும் நேரத்தில் சரியாகக் கூறி பிரியாவிடை கொடுத்துவிட்டார்.! மிக அற்புதமான வகுப்பு.! இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவனான என் மகனிடம் கேட்டேன் How was it? he said it was very usefull and i gathered sam new.! அதானே வேண்டும் நமக்கும்.! இந்நிகழ்வில் சில முரண்ப்பட்ட விசயங்களையும் கூறி உள்ளார். அதாவது முளைகட்டிய தானியங்களை நம்மால் ஜீரணிக்க முடியாது என்கிறார் அதுபோலவே திருமூலர் நூலில் உள்ளதாக ஒரு புதிய பிராணாயாமப் பயிற்சியை அனைவருக்கும் கற்றுக்கொடுத்தார்.! அதை அனைவரும் தினமும் 30 நிமிடம் செய்தால் எல்லா வியாதியும் குணமாகும் என்கிறார்.! ஆனால், அது கொஞ்சம் முரண்பட்ட முறையாக இருப்பதால் அனைவரும் செய்ய சிரமப்பட்டனர்.! இதுபோன்ற ஒரு மூச்சிப்பயிற்சியை சிறுவயதில் செய்த ஞாபகம் உள்ளது. ஆனால், இதில் கொஞ்சம் மாற்றம்.! அதுவும் சரிதான்.! ஒரேநாளில் ஒம்பது விசயத்தை முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது.! அப்படி முடியுமானால் எதற்கு ஒவ்வெரு ஊரிலும் நம்மைப் போன்ற நாலு யோகா ஆசான்கள் ஒரே வியாதியை குணப்படுத்த பல மாதங்கள் வகுப்பெடுத்துக்கிட்டு இருக்கான்.! ஆனாலும், இவர்கூறிய பயிற்சியை நாம் இரண்டு நாட்களாக செய்து வருகிறோம்.! ஒருவேளை இன்னும் சிலநாளில் திருமூலரானாலும் ஆகிவிடுவேன்.! நலம் பெருகட்டும் … ஹீலர் ரங்கராஜ் அவர்களின் திருமூலர், திருவள்ளுவர் வழியில் ஆச்சாரம் ஆரோக்கியம் DVD தேவைப்படுவோர் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்புக்கொள்ளுங்கள் 9894106291,9443306291. helar rengaraj youtube என்று தேடினால் வீடியோவிலும் வந்து ஆரோக்கியத்தை போதிப்பார்! யாம்ப்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் … amyogatrustblogspot.com
No comments:
Post a Comment