Wednesday, January 25, 2017

மருத்துவக் குறிப்புகள் 25/01/17

[1/24, 17:32] Am Yoga: சுவைத்துக் கூடப் பார்க்காமல் பனங்கருப்பட்டி என்று சொன்னாலே வேண்டாம் எனக் கூறுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்...!

காரணம், அந்த அளவு வெள்ளை சர்க்கரை உள்ளது என்பது தான் உண்மை. சர்க்கரையின் ஆதிக்கம் அதிகமுள்ள இந்தச் சூழலில் பனங்கருப்பட்டியை பற்றி பார்ப்போம்...!

இப்போதும் கிராமப்பகுதிகளில் பனங்கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துவதை காணலாம்.

பனைமரத்தின் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்கக் கூடியது என்பது நகரத்தில் பிறந்து வளர்ந்த நம் இளைய தலைமுறையினர்க்கு தெரியுமா ?

பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் தெரியுமா ?

ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது.

நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது.

பனங்கருப்பட்டி உடம்புக்கு மிகவும் நல்லது.
இப்படி பனையைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

சர்க்கரை பல தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது அதில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. சர்க்கரையை கரும்பினால் செய்கின்றோம், வெல்லம் என்பதில் மூன்று வகை உண்டு. கரும்பு வெல்லம், தென்னை வெல்லம், பனை வெல்லம் ! கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதை பனை வெல்லம் அல்லது பனங்கருப்பட்டி என்கிறோம்.

கிராமங்களில் எப்போதுமே பனங்கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.

பனங்கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு பனங்கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க பனங்கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் பனங்கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை பனங்கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

குப்பைமேனி கீரையுடன் பனங்கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் பனங்கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

காபியில் சீனிக்கு பதிலாக பனங் கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட பனங்கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் பனங்கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக பனங்கருப்பட்டி கருதப்படுகிறது.

பனங்கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

பனையை பற்றிய தகவல்கள்...

பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்க படுகின்றன.
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பனையிலிருந்து பெறப்படும் மற்ற பொருள்கள்
கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்களாகும்.

ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

இத்தனை பயன் தரும் பனையில் இருந்து பதநீர் எடுத்து தயாரிக்கப்பட்ட இவ்வளவு அற்புதமான பனங்கருப்பட்டியை நாள்தோறும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்.!

*இணையப்பகிர்வு*
[1/25, 17:03] Am Yoga: உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

  இன்றைய மருத்துவ சிந்தனை

அகத்திக் கீரை

அகத்திக் கீரைச் சாற்றை மூக்கில் பிழிந்து விட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல் குணமாகும்.

அகதாதிக் கீரைச் சாற்றில் ,ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் தயாரித்து அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்து வந்தால் ,மூலக் கிருமிகள் , மூல எரிச்சல் ,மூலச் சூடு , ரத்த மூலம் போன்றவை முழுமையாக குணமாகும்.

அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.

அகத்திக் கீரை ,மருதாணி இலை , மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தடவி வந்தால் கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.

அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து ,அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து ,கரும்படை , தேமல் , சொறி , சிரங்கு  போன்றவறாறின் மீது பற்றுப் போட்டு வந்தால் பூரண குணம் கிடைக்கும்.

அகத்திக் கீரை , ஊறவைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து ,அடைதட்டிக் காய வைக்கவும். பிறகு அதை நல்லெண்ணெயில் வடை சுடுவது போலா சுட்டு எடுத்துவிட்டு ,எண்ணெய்யைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு தினமும் அதை உடலில் தடவிக் குளித்து வந்தால் உடல் மிணுமிணுக்கும், கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.

அகத்திக் கீரைச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும்.இதனால் உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும்.!

*இணையப்பகிர்வு*
[1/25, 18:19] Am Yoga: 🙏உமீழ் நீர்:உயிர் நீர்🙏

 🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈☕🍵

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!_

_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

   _```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

 _```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.  எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..

🙏உமிழ் நீர் : உயிர் நீர்.!

*இணையப்பகிர்வு*
[1/25, 19:59] Am Yoga: *ஆண்மையை அதிகரிக்கஅற்புத மருந்து*

உளுந்து, எள், பூனைக்காலி வித்து,நெருஞ்சி வித்து,நீர்முள்ளி வித்து,நிலப்பனைக்கிழங்கு,தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு,மிளகு,திப்பிலி இவை வகைக்கு 75 கிராம் இவற்றோடு ஒரிஜினல்  பனங்கற்கற்கண்டு 750 கிராம்
சேர்த்து இடித்து வைத்துக்கொண்டு தினம் காலை, மாலை இரண்டுத் தேக்கரண்டி அளவு எடுத்து உணவிற்கு முன் ஒரு டம்ளர் நாட்டுப்பசுவின் பாலில் கலந்து  குடித்துவர
இந்த மருந்து தீரும் முன் நீர்ச்சுருக்கு,நீரடைப்பு,வெள்ளை,வெட்டை, தாது உற்பத்தி குறைபாடு நீங்கும்.
ஆண்மை விருத்தி, உடல் புஷ்டி ஏற்படும்.!

மருந்து உண்ணும் காலம் முழுவதும் உப்பு,புளி,காரம் குறைத்துக் கொள்ள வேண்டும்.!
கோழி,கருவாடு,முட்டையை விலக்க வேண்டும்.!
இல்லற வாழ்வில் ஈடுபடக் கூடாது.!

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

🌿100%இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🌻
AUM HERBALS
MOBILE & WHATSAPP
*9629368389*

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment