Sunday, June 5, 2016

சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் இரண்டு முறை தினமும் 3 நிமிடம். மட்ச்யாசனம் ஒரு முறை 1 முதல் நான்கு நிமிடம் வரை. சாந்தியாசனம் 3 முதல் 10 நிமிடம் வரை செய்துவந்தால் இரத்த அழுத்தம், தைராய்டு சீராகும். கால் நரம்பு சுருக்கு வியாதி குணமாகும். மலச்சிக்கல், கைகால் வலி குணமாகும்.  என்றும் இளமையான தோற்றம் கிடைக்கும். சர்வாங்க ஆசனத்தில்  உடல் முழுவதும் இரத்த ஓட்டம்  எதிர்புறமாக நடைபெறுவதால் உடல்பருமன், கொழுப்புகட்டி ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும். அதுபோலவே இந்த மூன்று ஆசனங்களையும் இணைத்து செய்வதால்  அட்ரீனல், பாங்கிரியாஸ், தைராய்டு, பிட்யூட்ரி, பீனியல் போன்ற உடம்பில் உள்ள அத்தனை நாளமில்லா சுரப்பிகளும் சீராக இயங்குவதால் நோய்கள் எளிதில்  குணமாவதோடு  நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.! நிறைய ஆசனங்கள் செய்ய முடியாதவர்கள் இந்த மூன்று ஆசனங்களை மட்டுமாவது தொடர்ந்து செய்து பயனடையுங்கள்.தீவிரமான கழுத்துவலி இருப்பவர்கள் முதல் இரண்டு ஆசனங்களை செய்யக்கூடாது.!  நலம் பெருகட்டும் amyogatrustblogspot.com     mobile:9629368389

No comments:

Post a Comment