இரண்டாவது உலக யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.! மத்திய அரசு மாவட்டத்திற்கு ஒரு லட்சம் விதம் இந்தியாவில் உள்ள அத்தனை மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி உள்ளது.! இதுபோக பெரிய கார்ப்பரெட் யோகா கம்பெனிகளுக்கு பலகோடி நிதியையும் இன்னும் பல்வேறு விதமான உதவிகளையும் செய்துவருகிறது.! மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பணத்தை அவர்களிடம் விண்ணப்பிக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து வழங்குவார்கள்.! போன ஆண்டு பல மாவட்டங்களுக்கான ஒதுக்கீடை ஒருசில மாநில அமைப்புகளே பெற்று அவர்களுக்கு தெரிந்த மாவட்ட அமைப்புகளுக்கு அனுப்பி அதன் மூலம் ஒவ்வெரு மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 50 இடங்களில் பயிற்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.! பத்து முதல் 30 நாட்கள் தெர்ந்தெடுக்கப் பட்ட பள்ளி, கல்லூரி, சமூக கூடங்களில் ஒத்திகை பிறகு ஒருநாள் கூத்து.! கர்ப்பரேட் சாமியார்கள் தனது பங்கிற்கு ஒரு மாவட்டத்திற்கு பல லட்சம் பேருக்கு யோகாவை கற்றுகொடுத்தாயிற்று தமிழகத்தில் பலகோடி பேருக்கு தீட்சை வழங்கி வருகிறோம் என்றெல்லாம் கூறி வசூல் சக்கரவரத்திகளாக வலம் வர ஆரம்பித்து விட்டார்கள்.! நம்மைப் போன்ற எளிய யோகா ஆசிரியர்களும் அமைப்புகளும் தனது சக்திக்கு இயன்றவாறு பல விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்க முனைந்து நிற்கிறார்கள்.! சென்ற ஆண்டு முதல் யோகா தினக் கொண்டாட்டத்தில் நமது அம்யோகா டிரஸ்ட் அடியேன் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் உலகிலேயே முதல் முறையாக தொடர்ந்து 32 நிமிடங்கள் சிரசாசன நிலையில் யோகா வகுப்பெடுத்து சாதனை புரிந்தோம் இதில் நான்கு முக்கியமான யோகாசனம், பிராணாயாமம், தியானம் மற்றும் இயற்கை வாழ்வியல் இரகசியங்களையும் கற்பித்தோம்.! இதில் நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.! அதில் ஒரு ஐந்துபேர் நம்மிடம் பிறகு முறையாக யோகா கற்க வந்தனர்.! உண்மையில் இந்த ஐந்துபேர் மட்டும்தான் நமது யோகா தினக் கொண்டாட்டத்தால் பயனடைந்தவர்கள். மற்றபடி கலந்து கொண்டவர்கள் வெறும் வேடிக்கை மனிதர்கள் மட்டும்தான்.! அதன்பிறகு நமது ஒருமாத கால இலவச சக்கரை சவால் முகாம், இரத்த அழுத்தம், உடல்பருமன், அடுக்குத்தும்மல் போன்ற நோய்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தோர் கிட்டத்தட்ட நூறுபேர் இவர்களில் பலர் இன்சுலின், இரத்த அழுத்த மாத்திரை போன்றவற்றை நிறுத்தி உணவு முறை, யோகா, வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.! உண்மையில் இவர்கள்தான் யோகாவின் ஆற்றலுக்கு சான்றாய் இருப்பவர்கள்.! ஒருநாள் கொண்டாட்டத்தில் இதுபோன்ற மனிதர்களுக்கு வாழ்த்து, இதுபோன்ற ஆய்வுப்பூர்வமான பணிகளை செய்யும் அமைப்புகளுக்கு பெரிய அங்கீகாரம் வழங்கி ஊக்குவித்தால் எளிய நிலையில் உள்ள யோகா ஆசிரியர்களையும் சாதனையாளர் களையும் கண்டறிந்து விருது வழங்கி கவுரவித்தல் போன்ற பணிகளை மத்தியஅரசு செய்தால் மட்டுமே உண்மையில் அது யோகாவை வளர்க்கும் கொண்டாட்டமாக அமையும்.! அல்லது இதெல்லாம் வெறும் வெற்று விளம்பரம் என்று சிலர் கூறுவதுபோல் ஆகிவிடும்.! நலம் பெருகட்டும் … amyogatrustblogspot.com mobile:9629368389
No comments:
Post a Comment